சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, எலுமிச்சை, 'ஐஸ்கிரீம், ரோபோ' ஆகியவற்றை அனுப்பியது 'ஸ்பேஸ் எக்ஸ்'

Keerthi
4 years ago
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, எலுமிச்சை, 'ஐஸ்கிரீம், ரோபோ' ஆகியவற்றை அனுப்பியது 'ஸ்பேஸ் எக்ஸ்'

கேப் கேனவரால்-விண்வெளியில் உள்ள, ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, எலுமிச்சை, 'ஐஸ்கிரீம், ரோபோ' ஆகியவற்றை 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் ஏந்தி சென்றது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதற்கு தேவையான பொருட்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்காக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இதுவரை 22 ராக்கெட்களை அனுப்பி வைத்துள்ளது.
விண்வெளி ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன், இந்த நிறுவனத்தின் 23வது ராக்கெட், நேற்று புறப்பட்டது. மொத்தம் 2,170 கிலோ எடையுள்ள பொருட்களை இந்த ராக்கெட் ஏந்தி செல்கிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று அது அடையும்.
இந்த ராக்கெட்டில் ஆய்வு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் எறும்பு, எலுமிச்சை பழம், அவகோடா பழம், சில செடிகள் அனுப்பப்பட்டுள்ளன. சில செடிகளுக்கு தேவையான விதைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர மனித உருவில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றும் ஏழு விண்வெளி வீரர்களுக்கு ஐஸ்கிரீமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4