இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டலும் ரயில் பஸ் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்
#SriLanka
#Curfew
Yuga
3 years ago
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாளை அதிகாலை 4 மணியுடன், நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.