இன்று உலக குடியிருப்பு தினம்!
1986 ஆம் ஆண்டுடன் ஆரம்பிக்கப்பட்ட உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு அக்டோபா் மாதத்தின் முதல் திங்கட் கிழமையில் உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளும் இத் தினத்தினை கொண்டாடடுகின்றது.
இதன்படி இம்முறை இன்று 4 ஆம் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையிலும் இத் தினத்தில் வவுனியாவில் செட்டிக்குளம் பிரதேச செயலாளா் பிரிவில் மெனிக்பாம் பிரதேசத்தில் ´அருனோதய நகரம்´ பிரதம மந்திரியும், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, இந்திய நாட்டின் வெளியுரவுச் செயலாளர் ஆகியோரினால் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் வைத்து ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.
இவ் வீடமைப்புத் திட்டத்திற்காக இந்திய அரசின் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 இலட்சமும் ரூபா மாணியமும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 1 இலட்சம் ருபாவையும் வழங்கியுள்ளது.