சுவிற்சலாந்தில் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு பணம் செலுத்தியவர் தனது பதவியை இழந்தார்.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு பணம் செலுத்தியவர் தனது பதவியை இழந்தார்.

சுவிற்சலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றாத அனைவருக்கும் 1000 பிராங்குகள் வழங்குவதாக வாட்டில் உள்ள ஒரு கழிவு சேகரிப்பு நிறுவனத்தின் முகாமையாளர் அறிவிப்பு பலகையில் செய்தி வெளியிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அந்த அறிவிப்பில் ‘இனப்படுகொலை என்ற சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத’ மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அது கூறுகிறது.

இந்த அறிவிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒருவரான புல்லியின் கம்யூனின் கவனத்திற்கு வந்தவுடன் முகாமையாளர் உடனே தனது வேலையை இழந்தார்.

மேலும் இந்த அறிவிப்பு விடயமாக முகாமையளார் சோதனைகளுக்கு பணம் செலுத்த வேண்டிய தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4