பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள நகைக்கடையொன்றில் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியான நகைகள் கொள்ளை!

#world_news #France
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள நகைக்கடையொன்றில் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியான நகைகள் கொள்ளை!

பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து €100,000 மதிப்பினான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Place de la Madeleine பகுதியில் உள்ள “Marthan Lorand” நகைக்கடையே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கடைக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €100,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதை சாதமாக பயன்படுத்தியே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், கொள்ளையன் தப்பிச் சென்ற நிலையில், அவனை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4