இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாவால் மரணம்!

Prasu
2 years ago
இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் சாவடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 40 பேரில் 22 ஆண்களும், 18 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 3 ஆண்கள், பெண் ஒருவர் என 4 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 19 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.

மேலும், இலங்கையில் இன்று 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 477 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 851 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!