ஊழல் இல்லாமல் நாட்டை முன்னோக்கிச் செல்ல ஆதரவு தேவை: ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
ஊழல் இல்லாமல் நாட்டை முன்னோக்கிச் செல்ல ஆதரவு தேவை: ஜனாதிபதி

மக்களுக்கு உறுதியளித்தவாறு புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதிமேலும் தெரிவிக்கையில், 

“கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும்,  குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

ஊழல் மற்றும் மோசடிகளை சகித்துக்கொள்ள முடியாது. அனைத்து அதிகாரிகளும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4