விரைவில் இந்தி படத்தில் களமிறங்கும் சமந்தா...!

Prabha Praneetha
2 years ago
விரைவில் இந்தி படத்தில் களமிறங்கும்  சமந்தா...!

கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக பரஸ்பரம் அறிவித்தனர். இது திரையுலகில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதும், நாக சைதன்யாவைவிட பிரபலமாக இருப்பதும் அவர்களது பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது. 

இந்தப் பிரிவு அறிவிப்புக்குப் பின் சமந்தா திரைப்படங்களை ஒப்புக் கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது குணசேகர் இயக்கத்தில் தெலுங்கில் சாகுந்தலம் படமும், தமிழில் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் கைவசம் உள்ளன. 

இந்தப் படங்களுக்குப் பிறகு கொஞ்ச நாள்கள் படங்களை தவிர்த்து ஓய்வாக இருக்கப் போவதாக அவர் கூறியிருந்தார். 

நெட்பிளிக்ஸுக்காக ஒரு வெப் தொடரில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டுள்ளார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தாவின் நடிப்பு பேசப்பட்டது. 

அவருடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஷாகித் கபூர் கூறியிருந்தார். பல வாய்ப்புகள் இந்தியில் இருந்து அவரை தேடி வருகின்றன. 

சமந்தாவும் இந்திப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். முதல்கட்டமாக மும்பையில் அவர் ஒரு பிளாட் வாங்கியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து மும்பையில் அவர் செட்டிலாவதாக செய்தி வெளியானது. 

அதற்குப் பதிலளித்தவர், ஹைதராபாத்தான் என்னுடைய சொந்த ஊர். இந்த ஊர்தான் எனக்கு எல்லாமும் தந்தது. இங்கிருந்து எங்கும் போக மாட்டேன் என்றார். 

இந்திப் படங்களில் நடிக்கையில் தங்கிக் கொள்வதற்காகவே அவர் மும்பையில் வீடு வாங்கியுள்ளார். நிரந்தரமாக செட்டில் ஆக அல்ல. 

இந்நிலையில், விரைவில் அவர் தனது முதல் இந்திப் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் தெலுங்கில் நாயகி மையக்கதையொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவை படங்களில் நடித்து சரிகட்டும்விதத்தில் தொடர்ச்சியாக நடிக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.