நண்பர்களுடன் மது அருந்தியவர் ஏரியில் சடலமாக மீட்பு

#Death #Police
Prathees
2 years ago
நண்பர்களுடன் மது அருந்தியவர் ஏரியில் சடலமாக மீட்பு

திஸ்ஸமஹாராம வீரவில ஏரியில் மிதந்த ஆணொருவரின் சடலம்  பொலிஸாரால் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நண்பர் குழுவுடன் மது அருந்தச் சென்று  காணாமல் போனவரின் சடலம் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இவ்வாறு சடமாக மீட்கப்பட்டவர் 45 வயதான ஹெந்தவிதாரண ரங்க சுராஜ் என  பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் மஹிந்தபுர வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த  திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் வெலிகமவிலிருந்து திஸ்ஸமஹாராமவிற்கு வந்த 6 நண்பர்களுடன் தேபரவெவ பகுதியில் தொழிலதிபருடன் வீரவில ஏரிக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்ததை உயிரிழந்தவரின் மூத்த  சகோதரர் கண்டுள்ளார்.

குறித்த நபர் மறுநாள் வரை வீடு திரும்பாததால் மூத்த சகோதரனால் வீரவில பொலிஸில் முறைப்பாடு செயய்ப்பட்டுள்ளது. 

உயரிழந்த நபரின்  மோட்டார் சைக்கிள் மற்றும் காலணிகள்  வீரவில ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நேற்றைய தினம் (13) கடற்படையினர் ஏரியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!