ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசனிடம் 2 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு

#Investigation
Prathees
2 years ago
 ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசனிடம் 2 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர், தொழிலதிபர் திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல் விசாரணை  ஆணைக்குழுவில் நேற்று சுமார் 2 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பெண்டோரா ஆவணத்தில் அவரது பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து  முன்னெடுக்கப்படும் விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று முற்பகல் 11 மணியளவில் அவர்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிருந்தார்.

சுமார் 2 மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்ததோடு அன்றைய தினம் அவரிடமிருந்து மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியஇ பென்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!