பிரத்தியேக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்
#Meeting
#Student
Prathees
2 years ago
பிரத்தியேக வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து நிதி அமைச்சர் மற்றும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் குழுவிற்கிடையே இன்று (16) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அலரி மாளிகையில் நடந்த குறித்த கலந்துரையாடலில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
நவம்பர் 1 ஆம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரயாடப்பட்டுள்ளது.
எனினும் எதிர்காலத்தில் இது தொடர்பாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும்இ இன்று முதல்இ நடைமுறையில் உள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பிரத்தியேக வகுப்புகள் இனி அனுமதிக்கப்படாது.