முல்லைத்தீவில் ஆரம்பமானது பாரிய படகு பேரணி

#Protest
Prathees
2 years ago
முல்லைத்தீவில் ஆரம்பமானது பாரிய  படகு பேரணி

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது  இன்று  காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள மீனவர்களின் போராட்டமானது படகுகளில் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.


இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

கடல் வளத்தினையும், நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுபை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்து வருகின்றது.

இதனை முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!