18 - 19 வயது பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான வேண்டுகோள்!
#Covid Vaccine
Prasu
2 years ago
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (17) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து MOH அலுவலகங்களிலும் ஃபைசர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் துலிப் லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்காக 18 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பிள்ளைகளையும் அழைத்து வருமாறு அவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.