இன்றைய வானிலை பற்றிய முக்கிய தகவல்
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மழைக்கான சாத்தியம் உள்ளது என்றும் அதேவேளை வானிலை அடிக்கடி மாறக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் 20ஆம் திகதி ஆரம்பிக்க இருந்த மழையானது ஒரு நாள் முன்னதாக இன்று முதல் வடகிழக்கு மாகாணங்களில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முக்கியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முதலும் பொத்துவில் மற்றும் மன்னார் பிரதேசங்களில் நாளை மறுதினம் 20ஆம் திகதி முதலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதியளவில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி உருவாகும் சாத்தியமும் உள்ளது.