ஒன்லைன் காரணமாக பாடசாலையை கைவிடும் நிலையில் மாணவர்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை
#Student
Prathees
2 years ago
ஒன்லைன் கற்பித்தல் முறை காரணமாக, பல குழந்தைகள் ஒன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாடசாலை நடவடிக்கைகள் இன்மையால் முன்பை விட குழந்தைகளில் மனநலப் பிரச்சினைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் குழந்தை மற்றும் இளம்பருவ மனோநிலை நிபுணர் டாக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டுகிறார்.
ஒன்லைன் கல்வி முறையால் குழந்தைகள் பாடசாலைக்கு திரும்புவதில் தயக்கம் காட்டலாம் அத்துடன் சில குழந்தைகளுக்குப் படிப்பை நிறுத்தும் போக்கு இருக்கலாம் என நிபுணர் டாக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டார்.