ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பலி எடுத்த நீர்வீழ்ச்சி
#Death
Prathees
2 years ago
வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காத்தான்குடி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 38 வயது தந்தைஇ 15 வயது மகன் மற்றும் 11 வயது மகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மேலதிக விசாரணைகளுக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளவாயா பொலிஸ் ஓஐசி டி. எம். ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.