மோதலை நிறுத்தி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தயாராகும் அமெரிக்கா, ஈரான்!
#SriLanka
#America
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
மோதலை நிறுத்தி, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.
அதன்படி, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் நாளை (30) கத்தாரின் தோஹாவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் ஊடகம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கடல்வழிப் போக்குவரத்து உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அடுத்த 30 நாட்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை ஈரான் தக்க வைத்துக் கொள்ளும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே