ரயில் சேவைகள் மீள் அறிவிப்பு வரும் வரை ரத்து!
Prabha Praneetha
2 years ago
இன்று முதல் மீண்டும் தொடங்கவிருந்த ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ( Kasun Chamara) தெரிவித்தார்.
அக்டோபர் 19ம் திகதி ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரயில்கள் இயக்குவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டாலும், மறு அறிவிப்பு வரும் வரை சேவை நிறுத்தப்படும் என்று கசுன் சாமர தெரிவித்துள்ளார்.