பணப்பிரச்சினை காரணமாகத் தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணன்! - கிராண்ட்பாஸில் கொடூரம்

Reha
4 years ago
பணப்பிரச்சினை காரணமாகத் தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணன்! - கிராண்ட்பாஸில் கொடூரம்

கொழும்பு, கிராண்ட்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

26 வயதுடைய நபரே இன்று இவ்வாறு கொலை செய்யப்பட்டார் எனக் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4