நாட்டில் எந்த பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை கூற முடியாது; பந்துல குணவர்தன
Prabha Praneetha
2 years ago
எதிர்காலத்தில் நாட்டில் எந்த பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை தன்னால் கூற முடியாது எனவும், சில மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சீனா உலகில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. ஐந்து நாட்கள் வேலை செய்யும் நாடு.
ஒரு நாள் மாத்திரமே திறக்கப்படுமாயின் உலகில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நாம் பெரும்பாலான மூலப் பொருட்களைச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம்.