மீண்டும் அதிகரித்த அரிசியின் விலை! சில பகுதிகளில் தட்டுப்பாடு

Reha
4 years ago
மீண்டும் அதிகரித்த அரிசியின் விலை! சில பகுதிகளில் தட்டுப்பாடு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு அரிசி ஆலை உரிமையாளர்களினால் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர், அரிசி விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

நாட்டரிசி 1KG :- 15 ரூபாவால் அதிகரிப்பு
சம்பா 1KG :- 10 ரூபாவால் அதிகரிப்பு
கீரி சம்பா 1KG :- 30 ரூபாவால் அதிகரிப்பு

அரிசி ஆலை உரிமையாளர்களினால் செப்டம்பர் மாதம் 28ம் திகதி, அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டது.

இதன்படி 1KG நாட்டரிசி 115 ரூபாவாகவும், 1KG சம்பா அரிசி 140 ரூபாவாகவும், 1KG கீரி சம்பா 165 ரூபாவாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையை அறிவித்திருந்தனர்.

எனினும், அரிசிக்கான விலை இன்று அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் சில அரிசி வகைகளுக்கு தட்டுபாடு நிலவுவதாக அறிய முடிகின்றது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4