பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளும் பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

#spiritual
பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ளும் பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பொதுவாக பெண்களுடைய ஆதிக்கத்தில் குடும்பம் நடந்தால் அந்த குடும்பம் சிறப்பானதொரு வழியில் செல்லும். எங்கும் எதிலும் ஆணாதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு கண்டிப்பாக நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பெண் அனைவரையும் அரவணைத்து செல்லும் மகாலட்சுமியாகவும், பிரச்சனை என்றால் எவரையும் எதிர்க்கும் பராசக்தி ஆகவும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களை மதித்து போற்றும் ஆண்கள் எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய பெண்கள் குடும்ப நலனுக்காகவும், தம்பதி ஒற்றுமைக்காகவும் தினந்தோறும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வது அவசியமாகும். அப்படி பெண்கள் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொழுது செய்ய வேண்டிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குடும்ப பொறுப்புகளை சுமந்து வழிநடத்தும் பெண்கள் எப்பொழுதும் அதிகாலையில் எழுவது மிகவும் நன்மைகளை கொடுக்கக் கூடியது ஆகும். அதிகாலையில் எழுபவர்களுக்கு வாழ்வில் தோல்வி என்பதே இருப்பதில்லையாம். அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் என்பதும் குறைவாகத் தான் இருக்கும். எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் அல்லது உங்கள் உள்ளங்கையை பார்த்து கண் விழிக்க வேண்டும்.

உள்ளங்கையை பார்த்து கண்விழித்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். இப்படி அதிகாலையில் எழுந்து நீங்கள் குளிக்கா விட்டாலும் பரவாயில்லை. குளித்தால் இன்னும் கூடுதல் பலன் உண்டாகும். கிழக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் அமரலாம். பூஜை அறை, வரவேற்பறை என்று எங்கு வேண்டுமானாலும் கிழக்கு பார்த்து அமர்ந்து கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை ஆத்மார்த்தமாக மனதிற்குள் 9 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு எழுந்து கதவைத் திறந்து வாசல் தெளித்து கோலம் போடலாம்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!