கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டம் இன்று
Prabha Praneetha
2 years ago
கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று (29) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்க இதற்கு முன்னர் கூடிய கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு போக்குவர்த்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களின் பயணங்கள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.