சாதாரண மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் வாரத்தில் இருந்து சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது கடைப்பிடிக்கப் படவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.