சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பெண்கள் ஐவர் உட்பட 6 பேர் கைது
#Arrest
#Colombo
Prathees
2 years ago
கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றின் முகாமையாளருடன் 5 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) பிற்பகல் வலான மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுள் 5 இந்தோனேசியப் பெண்களும், குறித்த விடுதி முகாமையாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதுடையவர்கள் எனபொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று (30) கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.