இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி! யாருக்கு வழங்கப்படுகிறது?
இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மருத்துவமனை, ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
மூன்றாவது டோஸாக பைசர் கொவிட் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்காக இன்று ஒரு பூஸ்டர் டோஸ் அறிமுகப்படுத்துகிறோம். கொழும்பு தேசிய வைத்தியசாலை, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் கொழும்பில் உள்ள ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் இந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றோம். அதன்படி, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள்தான் தொடக்கத்தில் மூன்றாவது டோஸ் கொடுப்பவர்கள். அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பகுதிகளில் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.