யாழில் ஆரம்பமானது தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு!
Reha
2 years ago
யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சியி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.