ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள் - வெளியான காரணம்

Reha
4 years ago
ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள் - வெளியான காரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அத்தியாவசியப் பொருட்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொள்கலன்களில் சுமார் 10,000 மெட்ரிக் தொன் சீனி அடங்கிய சுமார் 350 கொள்கலன்கள் இருந்ததாகவும் துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே நாட்டில் சீனி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் பெருமளவிலான அத்தியாவசிய பொருட்களுடன் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்ததால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4