பாடசாலை மாணவர்களால் இலங்கைக்கு ஆபத்தா?
Prabha Praneetha
2 years ago
கோவிட் நோய் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்கள் அதிகமானோர் சமூகத்தில் காண முடிவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தாமல் ஏனைய வகுப்புகளை திறப்பது மீண்டும் நாட்டினுள் கோவிட் தொற்று பரவுவதற்கு காரணமாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலப்பகுதியை ஒப்பிடும் போது கோவிட் நோயாளர்களிடையே குறைவான நிலை காணப்படுகின்ற போதிலும் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.