இனிமேலும் சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்படுமா?

Prabha Praneetha
2 years ago
இனிமேலும் சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்படுமா?

பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த வேலைத் திட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கனடாவில் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையினை வைத்திருப்பது கட்டாயம் என்று உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!