இன்றைய வேத வசனம் 08.11.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 08.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அவசரமும், வேகமும், பதற்றமும் நிறைந்த உலகத்தில், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருப்பதும், பொறுமையுடன் காத்திருப்பதும் அனேகருக்கு முடியாமல் இருக்கலாம்.

ஆனால் அதன் ஆசிர்வாதத்தை அறிந்தவர்கள், அவரை நேசிப்பவர்கள் அவர் சமுகத்தில் வாஞ்சையோடு காத்திருப்பார்கள்.

1) அமைதியாய் காத்திருங்கள்:-
"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;" (சங்கீதம் 37:7). வாக்குதத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கைப் பெறுவதற்காக ஆபிரகாம் 25 வருடம் அமைதியாக காத்திருக்கவில்லையா?

2) ஆவலோடு காத்திருங்கள்:-
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. (சங்கீதம் 130:6).

3) பொறுமையாய் காத்திருங்கள்:-
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். (சங்கீதம் 40:1). தனக்கு தேவன் அளித்த சொப்பனங்கள் நிறைவேற யோசேப்பு 13 ஆண்டுகள் பெறுமையாய் காத்திருக்கவில்லையா?

4) நம்பிக்கையோடு காத்திருங்கள்:-
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. (புலம்பல் 3:26). அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; என்று யோபு காத்திருக்கவில்லையா?

5) பெற்றுக்கொள்ளும் வரை காத்திருங்கள்:-
அப் 1:5. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தாவியானவரைப் பெற்றுக்கொள்ள உறுதியுடன் சீஷர்கள் காத்திருக்கவில்லையா?

ஆபகூக் 2:3
அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.  

ஆமென்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!