மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா?

#spiritual
மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா?

ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் இருக்க வேண்டிய ஒரு அம்சம் மகாலட்சுமி அம்சமாக விளங்குகின்றது. லட்சுமி நிறைந்திருக்கும் இல்லத்தில் துன்பத்திற்கும், துயரத்திற்கும் இடமில்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் மகாலட்சுமி கடாட்சம் இருக்கும் பொழுது தான் நமக்கு உண்டாகிறது. நம் வீட்டில் மகாலட்சுமி இருக்கிறாள் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

பணம், காசு அதிகம் இருந்தால் மட்டும் மகாலட்சுமி நம்முடன் இருக்கிறாள் என்பது அர்த்தமல்ல. மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும் இல்லமும் மகாலட்சுமி நிறைந்திருக்கும் இல்லம் தான். லக்ஷ்மி கடாக்ஷம் என்பது செல்வ வளத்தை குறிப்பது மட்டுமல்ல, குடும்ப வளர்ச்சியையும் குறிக்கிறது. சுபகாரியத் தடைகள் ஏற்படாமல் இருப்பது, நினைத்த காரியங்களில் வெற்றி அடைவது, தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் ஏற்படாமல், வருமானம் இல்லாமல் இருப்பதும் லக்ஷ்மி கடாக்ஷம் தான்.

நம் வீட்டில் மகாலட்சுமி இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்கு சில வழிமுறைகள் உண்டு. இவற்றைக் கடைப்பிடித்து இதனை நாம் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் எப்பொழுதும் இரவு தூங்குவதற்கு முன்னர் பூஜை அறையில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அந்த தண்ணீரின் அளவு கொஞ்சம் குறைந்து இருந்தால் அங்கு லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கிறது என்பது அர்த்தம்.

சாதாரணமாகவே பூஜை அறையில் நாம் வைக்கும் தீர்த்த தண்ணீர் 2 நாட்களில் குறைந்துவிடும். இதற்கு அறிவியல் ரீதியாக ஆவியாதல் காரணமாக இருந்தாலும் ஒரே நாளில், ஒரே இரவில் தண்ணீர் எப்படி குறையும்? லக்ஷ்மி நிறைந்திருக்கும் இல்லத்தில் நிச்சயம் நீங்கள் வைத்த தண்ணீர் குறையும் என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். இதை வைத்து நீங்களும் உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

லக்ஷ்மி கடாட்ஷம் நிறைந்திருக்க வீட்டில் எப்பொழுதும் தெய்வீக மணம் வீச வேண்டும். வெளியிலிருந்து வீட்டிற்கு வருபவர்களுக்கு வீட்டிற்குள் நுழைந்ததும் தெய்வீகமான வாசனை வருவதை உணர வேண்டும். இதற்கு தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி தூபம் போட்டு வைக்க வேண்டும். ஒரு தூபத்தை ஏற்றி வைத்தால் போதும், வீடு முழுவதும் அதன் வாசனை பரவ ஆரம்பிக்கும். நீங்கள் வீட்டுக்குள் இருப்பதால் அதனை உணர முடியாது, ஆனால் வெளியிலிருந்து வீட்டிற்கு வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

கெட்ட எண்ணத்துடன் உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்களுக்கு கூட அந்த எண்ணத்தை மாற்றி விடக்கூடிய சக்தி தூபத்திற்கு. உண்டு. அதனால் தான் தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கின் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைக்கின்றாள் எனவே இவற்றை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். பணம், காசு அதிகரிப்பதற்கு மட்டும் மகாலட்சுமி பூஜை செய்வது கிடையாது. இல்லத்தில் சுபிட்சம் இருக்கவும், தடை இல்லாத சுபகாரியங்களும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க மகாலட்சுமி அருள் கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!