யாழில் இருந்து கொழும்பு செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
#SriLanka
#Jaffna
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் 3வது ரயில் சேவையாக உத்தரதேவி ரயில் செவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில் மாலை 6.00 யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மறுநாள் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.