டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வீடுகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தல்!
#SriLanka
#Dengue
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமூக சிறப்பு மருத்துவர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 50,459 டெங்கு பாதிப்புகளும், 30 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்த அவர், நுளம்புகளின் அடர்த்தியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றும், வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தவறாமல் சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
நீண்ட வார இறுதி நாட்களில் பொது மக்கள் கூடுவதால் டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்ததோடு, மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே