மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை: 628 பேர் கைது
#Arrest
#Police
Prathees
2 years ago
ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் நேற்று (12) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மூலம் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.