வடக்கில் சமூக காவல் குழுக்கள்

#SriLanka #Jaffna #Police
வடக்கில் சமூக காவல் குழுக்கள்

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வலப்புறம் வழிநடத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் தொடர்களை தயாரித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல். சமூக காவல் குழுக்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே திட்டமாகும்.

இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4