கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

#Mannar #Death
Prathees
4 years ago
கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் மிதந்து வந்த இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் கடற்கரை பகுதிக்கு இன்றைய தினம் சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4