இயற்கை அனர்த்தத்தால் இவ்வாண்டு இதுவரை 106 பேர் மரணம்: சமல்

#Death #Chamal Rajapaksha
Prathees
2 years ago
இயற்கை அனர்த்தத்தால் இவ்வாண்டு இதுவரை 106 பேர் மரணம்: சமல்

இந்த வருடத்தில் இதுவரை இயற்கை அனர்த்தங்களினால் மொத்தமாக 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வருடம் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 23,119 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு சேதமடைந்த மொத்த வீடுகள் 29,584 எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் ரஜிகா விக்கிரமசிங்க முன்வைத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் பதிலளிக்கையில்,

கடந்த இரண்டு வாரங்களில் மோசமான வானிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் உள்ள பத்து பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 546 குடும்பங்களைச் சேர்ந்த 1,895 நபர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

கேகாலை மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 104 பேர் நான்கு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கேகாலை மாவட்டத்தில் எட்டு வீடுகள் முழுமையாகவும் 278 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதற்கட்டமாக 10.000 ரூபாய் வழங்கப்படும். தேவையான நிதி தற்போது மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!