அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் எட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று

#Corona Virus
Keerthi
4 years ago
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் எட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் எட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவில் அண்மையில் 13 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க சிங்கங்கள், இரண்டு பனி சிறுத்தைகள், இரண்டு சிறுத்தைகள் ஒரு புலி, ஒரு மலைச்சிங்கம் என எட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து விலங்குகளுக்கும் லேசான அறிகுறிகள் இருந்துள்ளன. சில விலங்குகளுக்கு இருமலும், சளி வெளியேறுவதுமாக இருந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில விலங்குகளுக்கு பசி குறைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விலங்குகளுக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து பூங்கா ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து பூங்கா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து விலங்குகளுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4