கனடாவில் அவசரகால நிலை

#world_news #Canada
கனடாவில் அவசரகால நிலை

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
அத்துடன் கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

பெருமழை மற்றும் மண்சரிவுகள் வீதிகளை அழித்து பல நகரங்கள் மூழ்கடித்ததன் பின்னர் ஒரு மரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறைந்தது மூன்று காணாமல்போயுள்ளனர். மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உயிரிழப்புகள் மேலும் உயர்வடையக் கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4