நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
#Arrest
Prathees
2 years ago
பல பகுதிகளில் மக்களிடம் பணம் மோசடி செய்து தலைமறைவான நபரை மேல் மாகாண தெற்கு, புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சச்சின் என்ற டொன் கிருஷ்ண அசோக திலகரத்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக பொரலஸ்கமுவ, மிரிஹான, பிலியந்தலை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.