யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் இப்படியும் நடக்கிறது!

#SriLanka
யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் இப்படியும் நடக்கிறது!

யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் சாப்பாட்டில் வண்டு மற்றும் இரும்பு தும்பு ஆகிய காணப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் அது குறித்து உணவு விடுதியில் பணியாற்றியோர் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

பரிமாறப்பட்ட உண்வில் பாத்திரம் கழுவ பயன்படும் இரும்பு தும்பின் துண்டு ஒன்றும், வண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. இது குறித்து அங்கு பணியாற்றியவர்களிடம் விடயத்தை கூறியபோது அவர்கள் உடனடியாக உணவு தட்டை துாக்கி சென்றுள்ளனர்.

அதன் பின்னர் நுகர்வோர் பணம் செலுத்தும் இடத்திலும் இது குறித்து சுட்டிக்காட்டிய நிலையில் முகாமையாளருக்கு கூறி நடவடிக்கை எடுப்போம் என கூறியவர்கள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை உணவில் வண்டு மற்றும் இரும்பு தும்பு எனபனபற்றி அவர்கள் எதுவும் நடக்காததுபோல் இயல்பாக நடந்து கொண்டதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ்.நகரில் சாதாரண உணவகங்கள், தெருக்கடைகளுக்கு சென்று சட்டத்தை காப்பாற்றும் சுகாதா பிரிவினர் பணம் படைத்தவர்களின் உணவகங்களில் சட்டத்தை காப்பாற்றுவதே இல்லை எனவும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.   
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!