மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விஷேட வேலைத்திட்டம்!
Prabha Praneetha
2 years ago
கோவிட தோற்று நோயை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாத இறுதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஊடாக இது தொடர்பில் தௌிவூட்டவுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.