இரசாயன வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி
Prabha Praneetha
2 years ago
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனுமதியானது பெரும்போகத்தில் விவசாய செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க (Prof. Udith K.Jayasinghe) ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
பெரும்போகச் செய்கைக்கான அவசர மற்றும் அத்தியாவசிய தேவையாகக் கருதி விவசாய இரசாயனங்கள் மற்றும் தாவர போசாக்கு பொருட்கள் என்பன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.