இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து
Prathees
2 years ago
நெல் மற்றும் மரக்கறிகளுக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உர இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நாளை (22) நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நாளைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.