மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக தமிழரசு கட்சியின் தீவக முக்கியஸ்தர்களை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு
Reha
2 years ago
மாவீரர் நினைவேந்தல் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் , தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணி செயலாளர் கருணாகரன் குணாளன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் அம்பலம் கனகையா ,
ஊர்காவற்துறை தொகுதி கிளையின் நிர்வாக கிளை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , ரமேஷ் றமில்டன் , ருத்ரன் ( நெடுந்தீவு ) ஆகியோருக்கு ஊர்காவற்துறை பொலிசாரினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவுக்கிணங்க இன்று அத்தரப்பினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இவர்கள் சார்பாக சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோஷன் ஆஜராகியிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .