திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மீது தாக்குதல் முயற்சி – சபையில் அமளி
Reha
2 years ago
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (23) காலை சபாநாயகா் மஹிந்த யாப்பா அபயவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டபோது சபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினா்கள் முயற்சித்தமையினால் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் சமிந்த விஜேசிறி, குட்டியாராச்சி எம்.பியை தாக்குவதற்கு முயற்சித்தபோது மேலும் சில எம்.பிக்கள் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனா்.