மேல் மாகாணத்தில் விசேட சோதனை தீவிரம்! (லங்கா4.கொம் / Lanka4.com)

Reha
2 years ago
மேல் மாகாணத்தில் விசேட சோதனை தீவிரம்! (லங்கா4.கொம் / Lanka4.com)

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மதியம்   3 மணியிலிருந்து மாலை 5 மணிவரையும் 1,475 பொலிஸார் இணைந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 23 ஆயிரத்து 193 பேர் சோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 324 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 823 பொது இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணித்த 4 ஆயிரத்து 351 பேருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 918 போக்குவரத்து பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 3 ஆயிரத்து 328 மோட்டார் சைக்கிள்களும், 3 ஆயிரத்து 777 ஓட்டோக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வாகனங்களில் பயணித்த 11 ஆயிரத்து 340 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத 3 ஆயிரத்து 334 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!