அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை (லங்கா4.கொம் / Lanka4.com)
#Parliament
Prathees
2 years ago
அரச சேவைக்கு அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி அவர்களின் மாதாந்த ரூ.41,000 ஆக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (24) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
“சுமார் 58இ000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நாங்கள் வேலை வழங்கியுள்ளோம், அவர்களுக்காக நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
இவர்கள் அனைவரும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தர அரச சேவைக்கு நியமிக்கப்பட்டு 41000 ரூபா சம்பளம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.