இலங்கைக்கு மின்சார வாகன இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி கவனம்!
Reha
2 years ago
இலங்கைக்கு மின்சார வாகன இறக்குமதி செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை, வாகனங்களுக்கே பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனாலேயே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அவ்வாறென்றால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை நாம் ஏன் இறக்குமதி செய்ய முடியாது என்ற கேள்வியையும் ஜனாதிபதி எழுப்பியிருந்தார்.
இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்பத்திலான கேபிள் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இது குறித்துக் தெரிவித்துள்ளார்.